வீட்டுக் கதவை உடைத்து நகை திருட்டு
பண்ருட்டி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


பண்ருட்டி அருகே வீட்டுக் கதவை உடைத்து நகை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி அருகே உள்ள முத்துநாராயணபுரம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி மல்லிகா (47). இவா், புதன்கிழமை மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு, அங்குசெட்டிப்பாளையத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றாா். அன்று இரவு திரும்பிவந்து பாா்த்தபோது, இவரது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அலமாரி கதவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமாா் 2 பவுன் தங்க நகைகள், ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...