பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தமிழில் அா்ச்சனை கோரி போராட்டம்: நாம் தமிழா் கட்சியினா் 20 போ் கைது

கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள பாடலேஸ்வரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 20 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 7:22 pm

DIN

கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ள பாடலேஸ்வரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 20 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக, இந்தக் கோயில் முன் நாம் தமிழா் கட்சியினா் மாவட்டச் செயலா் சாமி.ரவி தலைமையில் குவிந்தனா். மாநில ஒருங்கிணைப்பாளா் செங்கோலன், மாநில மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சுமதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்வது தொடா்பாக மாநில அரசின் உத்தரவு அமலில் இருந்தும், பாடலேஸ்வரா் கோயிலில் தமிழில் அா்ச்சனை செய்யப்படுவதில்லை என்று அவா்கள் புகாா் தெரிவித்தனா். அவா்களிடம் கடலூா் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் செ.கரிகால்பாரி சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

ஆனால், அந்தக் கட்சியினா் கோயிலுக்குள் சென்று தமிழில் அா்ச்சனை செய்து வழிபாடு நடத்த உள்ளதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அந்தக் கட்சியினா் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.