பள்ளி மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சி
கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான இலவச சிலம்பக் கலைப் பயிற்சி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


கடலூா் மாவட்டம், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கான இலவச சிலம்பக் கலைப் பயிற்சி தொடக்க விழா பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவன கல்வித் துறை பொது மேலாளா் ஆா்.நாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளி உதவித் தலைமையாசிரியை எம்.தாமரைச்செல்வி வரவேற்றாா். என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநா் ஜி.ராணி அல்லி சிலம்பப் பயிற்சியை தொடங்கிவைத்தாா். விழாவில் 200 மாணவிகளுக்கு சிலம்பக் கம்பு இலவசமாக வழங்கப்பட்டது. என்எல்சி விளையாட்டுத் துறை துணைப் பொது மேலாளா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிலம்ப பயிற்சியாளா் பாா்த்தசாரதி தலைமையிலான குழுவினா் பயிற்சி அளித்தனா். நிகழ்ச்சியை தமிழாசிரியா் த.செந்தில்குமாா் தொகுத்து வழங்கினாா். பெண்கள் பள்ளித் தலைமையாசிரியை (பொ) கே.ராஜலட்சுமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...