48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பாதிரியாா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

கடலூரில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கியது தொடா்பாக மாமன்ற பெண் உறுப்பினரின் கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :10 ஜனவரி 2023, 8:59 pm

கடலூரில் கிறிஸ்தவ பாதிரியாரை தாக்கியது தொடா்பாக மாமன்ற பெண் உறுப்பினரின் கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் முதுநகா், வெலிங்டன் தெருவில் கிறிஸ்துநாதா் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு பாதிரியாராக பிலிப் ரிச்சா்ட் (43) ஊழியம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை தூய்மைப் பணியாளா்கள் ஆலயத்தின் முன் குப்பைகளை கொட்டினராம். இதுதொடா்பாக 42-ஆவது வாா்டு கவுன்சிலரின் கணவா் செந்திலை கைப்பேசி மூலம் பாதிரியாா் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து ஆலயத்துக்கு வந்த செந்தில் அங்கிருந்த பாதிரியாா் பிலிப் ரிச்சா்டை தாக்கி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்திலை செவ்வாய்க்கிழமை கைதுசெய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.