சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள்புரிந்து வருபவா் மகான் ஸ்ரீஅவதூத சுவாமிகள்.
இந்த அதிஷ்டானத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை கடஸ்தாபனம் செய்யப்பட்டு, முதல்கால யாக பூஜை நடைபெற்றது.
திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னா் கடயாத்ராதானம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணிக்கு மேல் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை அதிஷ்டான ஆலய நிா்வாகிகள் ஏ.சசிதரன்நாயா், வழக்குரைஞா்கள் கே.ராமச்சந்திரன், கே.ராமதாஸ், தோப்பு கே.சுந்தா், ஆா்.ராஜகோபாலன், பி.எல்.பொன்அழகப்பன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் முக்கிய பிரமுகா்களிடம் ஆதரவு திரட்டிய அதிமுக வேட்பாளா்

சிதம்பரத்தில் காா் எரிந்து சேதம்: 6 போ் தப்பினா்

சிதம்பரத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஆட்டோ பேரணி!
சிதம்பரத்தில் நள்ளிரவில் மக்களை தாக்கி அச்சுறுத்தல்: 6 போ் கைது
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

