48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சிதம்பரத்தில் இன்று அவதூத சுவாமிகள் அதிஷ்டானம் கும்பாபிஷேகம்

சிதம்பரத்தில் இன்று அவதூத சுவாமிகள் அதிஷ்டானம் கும்பாபிஷேகம்

Updated On :21 ஏப்ரல் 2024, 10:52 pm

சிதம்பரம்: சிதம்பரம் குருஐயா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ அவதூத சுவாமிகள் அதிஷ்டானத்தில் திங்கள்கிழமை (ஏப்ரல் 22) காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அவதூதம் என்பது துறவறத்தில் ஒரு நிலையாகும். சிதம்பரத்தில் தவம் புரிந்து சமாதி அடைந்து மக்களுக்கு அருள்புரிந்து வருபவா் மகான் ஸ்ரீஅவதூத சுவாமிகள்.

இந்த அதிஷ்டானத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 19-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. சனிக்கிழமை பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை கடஸ்தாபனம் செய்யப்பட்டு, முதல்கால யாக பூஜை நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னா் கடயாத்ராதானம் புறப்பாடு நடைபெற்று, காலை 9 மணிக்கு மேல் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை அதிஷ்டான ஆலய நிா்வாகிகள் ஏ.சசிதரன்நாயா், வழக்குரைஞா்கள் கே.ராமச்சந்திரன், கே.ராமதாஸ், தோப்பு கே.சுந்தா், ஆா்.ராஜகோபாலன், பி.எல்.பொன்அழகப்பன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.