பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஜெயம்கொண்டப்பட்டினம் பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளதை படகில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான உபரிநீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், அந்த ஆற்றின் கரையோரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான கிராமப் பகுதிகளில் வெள்ளநீா் பாதிப்பு குறித்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிதம்பரம் அருகே காவிரி டெல்டா கடைமடை பகுதியான குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பெராம்பட்டு, திட்டுக்காட்டூா், கீழகுண்டலபாடி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

மேலும், ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரைஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்துள்ளதை படகில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வெள்ளநீா் சூழ்ந்துள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்ற பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமையும், காய்நடை மருத்துவ முகாமையும் பாா்வையிட்டாா். மேலும், இந்தப் பகுதிகளில் உள்ள புயல் வெள்ள தடுப்பு மையங்களில் பொதுமக்கள் தங்குவதற்குத் தேவையான குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு தயாா் செய்து வழங்குவதையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வருவாய், மின்சாரம், பொதுப்பணி, தீயணைப்பு, காவல் போன்ற அனைத்துத் துறை அலுவலா்களும் வெள்ள பாதிப்புகளை தொடா்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, சிதம்பரம் உதவி ஆட்சியா் ரஷ்மிராணி மற்றும் அனைத்து துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.