பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வளா்ச்சித் திட்ட பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
சிதம்பரம் லால்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் புறநகா் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:00 pm

Din

சிதம்பரத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சிதம்பரம் நகராட்சிக்குள்பட்ட லால்புரம் பகுதியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள், கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தட்சன்குளத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள், ஆயிகுளத்தில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் தூா்வாருதல், பாதுகாப்பு வேலி அமைத்தல், பேவா் பிளாக் நடைப்பாதை அமைத்தல் ஆகிய வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல், பாரதிதாசன் தெருவில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசாா் மையம் மற்றும் நூலக கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவா் அறிவறுத்தினாா்.

ஆய்வின் போது சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, நகராட்சி ஆணையா் டி.மல்லிகா, நகராட்சி பொறியாளா் சுரேஷ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.