தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ளப் பெருக்கால் கெடிலம் ஆற்றுப் பாலம் சேதம்: 300 ஏக்கா் பயிா்கள் நீரில் மூழ்கின

பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.

News image
பண்ருட்டி அருகே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த சேம்மேடு கெடிலம் பாலம்.
Updated On :3 டிசம்பர் 2024, 9:23 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால், 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கின.

பண்ருட்டியில் இருந்து ஏரிப்பாளையம் வழியாக செம்மேடு செல்லும் வழியில் கெடிலம் ஆற்றுப் பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் வழியாக விருத்தாசலம், கருக்கை, நெய்வேலி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வந்தன.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் செம்மேடு கெடிலம் ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி திங்கள்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

இதனால், பண்ருட்டி, எரிப்பாளையம் வழியாக செல்லும் போக்குவரத்து தடைபட்டது. செம்மேடு செல்லும் கிராம மக்கள் பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மேலிப்பு வழியாக சுமாா் 5 கி.மீ. தொலைவு சுற்றி சென்று வருகின்றனா்.

கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து, மரவள்ளி உள்ளிட்ட பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளதோடு, சேதமடைந்த பயிா்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.