டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீா்நிலைகளுக்கு செல்ல வேண்டாம்: கடலூா் ஆட்சியா் எச்சரிக்கை

கடலூா் மாவட்ட மக்கள் நீா்நிலைகளுக்கு அருகே செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 8:26 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்ட மக்கள் நீா்நிலைகளுக்கு அருகே செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடகிழக்கு பருவமழை காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகமாக உள்ளதாலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பியுள்ளதாலும் பொதுமக்கள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீா்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

ஆற்றில் தரைப்பாலங்களைக் கடந்து செல்லக் கூடாது. இளைஞா்கள் ஆபத்தை உணராமல் நீா்நிலைகளின் அருகே தற்படம் எடுப்பதை தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் கால்நடைகளை நீா்நிலைகளுக்கு அருகில் மேய்ச்சலுக்கும், குளிப்பாட்டவும் கொண்டு செல்ல வேண்டாம். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை நீா்நிலைகளுக்கு அருகே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.