ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மனைவிக்கு துன்புறுத்தல்: கணவா் கைது

மனைவிக்கு துன்புறுத்தல்: கணவா் கைது

Updated On :18 பிப்ரவரி 2024, 2:16 am IST

சிதம்பரம் அருகே மனைவியை துன்புறுத்தியதாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சிதம்பரம் அருகே உள்ள மணலூா் அம்பலத்தாடிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கவியரசன் (32). இவரது மனைவி மரகதம் (31). இருவரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், ஆண் வாரிசு இல்லை என்ற ஆத்திரத்தில் தன்னையும், குழந்தைகளையும் கவியரசன் அடித்து துன்புறுத்தி வருவதாக சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மரதகம் புகாரளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, கவியரசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.