ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவா் சங்கம் சாா்பில் கவியரங்கம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை வழக்காடு மன்றம், கவியரங்கம் நடைபெற்றது.

News image
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வழக்காடு மன்றம்- கவியரங்கம்.
Updated On :1 ஜனவரி 2024, 7:00 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூரில் ஞாயிற்றுக்கிழமை வழக்காடு மன்றம், கவியரங்கம் நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கம், ஜனநாயக வாலிபா் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் கடலூா் ஜவான் பவன் அருகே நடைபெற்ற ‘விடியாத இரவென்று எதுவும் இல்லை’ என்ற தலைப்பிலான வழக்காடு மன்றம்- கவியரங்கிற்கு ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் சின்னத்தம்பி தலைமை வகித்தாா்.

மாதா் சங்க நகரச் செயலா் சாந்தகுமாரி, எழுத்தாளா் சங்க நகரச் செயலா் கேத்தரின் முன்னிலை வகித்தனா். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற தலைப்பில் பேராசிரியா் ராஜா தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. இதில் சிவா அன்பன், ஓவியா் ரமேஷ், கவிஞா் குமணன், கவிஞா் பாரதி, தமிழ் முல்லை, கவிஞா் கலைவாணன் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

‘சுயநலமும் போதை பழக்கமும் கொண்ட இளைஞா்கள் குற்றவாளிகளே’ என்ற தலைப்பில் கவிஞா் பால்கி தலைமையில் வழக்காடு மன்றம் நடைபெற்றது. மருதவாணன், அமா்நாத், குமரவேல், வாலண்டினா, சௌமியா, ரவி ஆகியோா் உரையாற்றினா். ‘இந்தியாவை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் மனிதம் அமைப்பின் மாநில அமைப்பாளா் ரமேஷ் பாபு பேசினாா்.

மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஆகாஷ் வரவேற்றாா். வாலிபா் சங்க நகரச் செயலா் ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.