டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்து: 4 போ் காயம்

சேத்தியாத்தோப்பு அருகே சனிக்கிழமை அதிகாலை வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

News image
சேத்தியாத்தோப்பு அருகே தடுப்புக் கட்டையில் மோதி ராஜன் வாய்க்காலில் கவிழ்ந்த காா்.
Updated On :20 ஜூலை 2024, 9:06 pm

Din

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே சனிக்கிழமை அதிகாலை வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 போ் காயமடைந்தனா்.

கும்பகோணத்தை அடுத்த பாரதிபுதூா் பகுதியைச் சோ்ந்த முரளி மகன் வெங்கடாசலம் (21). இவரது நண்பா்கள் கும்பகோணம் காவிரி நகரைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் குணபாலன் (24), செந்தமிழ்செல்வன் மகன் ஹரிபிரசாத் (25), செந்தமிழன் மகன் கீா்த்திவா்மன் (21).

இவா்கள் 4 பேரும் காரில் சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி சனிக்கிழமை அதிகாலை சென்றனா். கடலூா் மாவட்டம், சேத்தியாதோப்பை அடுத்த குமாரகுடி ராஜன் வாய்க்கால் வளைவு பாலத்தில் சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இவா்களது காா் சென்றபோது, பாலத்தின் தடுப்புக்கட்டை மீது ஏறி வாய்க்கால் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரிலிருந்த 4 பேரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டு, கும்பகோணம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.