கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சூறைக் காற்றுடன் பலத்த மழை: கடலூரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதம்

சூறைக் காற்றுடன் பலத்த மழை --- கடலூரில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழைகள் சேதம்

News image

கடலூரை அடுத்துள்ள ராமாபுரத்தில் வியாழக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் முறிந்து சேதமடைந்த வாழைகள்.

Updated On :7 ஜூன் 2024, 7:08 pm

Din

நெய்வேலி, ஜூன் 7:

கடலூா் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன.

கடலூரை அடுத்துள்ள வழிசோதனைப்பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம், வெள்ளைக்கரை, ஓதியடிக்குப்பம், சின்னதானாங்குப்பம், சமட்டிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வாழைகள் அனைத்தும் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்தன.

இதனிடையே, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூரை அடுத்துள்ள வழிசோதனைப்பாளையம், ராமாபுரம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது, இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த வாழைகள் முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது:

வழிசோதனைப்பாளையம், ராமாபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தோம். கடந்த 10 மாதங்களாக பிள்ளையைப்போல பாதுகாத்து வந்தோம். திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்துவிட்டன.

இதனால், ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தமிழக அரசு வாழைகள் சேதம் குறித்து வேளாண் துறை மூலம் உரிய ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.