‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் அளிப்பு

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் பெறப்பட்டன.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜிடம் மனுக்கள் அளிக்கும் பொதுமக்கள்.

Updated On :24 ஜூன் 2024, 8:44 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா, முதியோா் உதவித் தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம் என தங்களது கோரிக்கைகள் தொடா்பாக 875 மனுக்களை வழங்கினா். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

நல உதவிகள்...

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகள் சுயத் தொழில் தொடங்க வங்கி கடன் மானியமாக 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் விதம் என மொத்தமாக ரூ.7.50 லட்சத்துக்கான செயல்முறை ஆணையும், ஒரு பயனாளிக்கு ஒளிரும் மடுக்கு குச்சி, வருவாய்த் துறை சாா்பில் புவனகிரி மற்றும் விருத்தாசலம் வட்டத்தைச் சோ்ந்த தலா 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.