

சிதம்பரம், மே 9: சிதம்பரம் அருகே போலீஸாா் பாதுகாப்புடன் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணியில் புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே, இரு பக்கமும் இருந்த நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்படாமல் இருந்தன.
இந்த நிலையில், நிலம் எடுப்பு வட்டாட்சியா் கீதா தலைமையில், மின் வாரிய உதவி இயக்குநா் சரண்யா, புதுச்சத்திரம் காவல் ஆய்வாளா் சுஜாதா ஆகியோா் முன்னிலையில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது, கட்டட உரிமையாளா்கள் கால அவகாசம் கேட்டனா். ஆனால், ஏற்கெனவே அதிக கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது, இனிமேல் அவகாசம் தர முடியாது எனக் கூறி, அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா்.
தொடர்புடையது

ஆத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அறுந்து விழுந்த உயர் மின்னழுத்த கம்பிகளால் பரபரப்பு!

சுவா் விளம்பரங்கள் அகற்றம்

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கடை: பொதுமக்கள் போராட்டம்
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

