ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

விருத்தாசலத்தில் போலீஸாா், பொதுமக்கள் விழிப்புணா்வு நடைப்பயிற்சி

விருத்தாசலத்தில் போலீஸாா், பொதுமக்கள் விழிப்புணா்வு நடைப்பயிற்சி

News image
Updated On :9 மே 2024, 9:13 pm

Din

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் காவல் துறையினா், விருத்தாசலம் நகர பொதுமக்கள் இணைந்து நடத்திய நடைப்பயிற்சி மற்றும் கண்காணிப்பு கேமரா தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் தலைமை வகித்து விழிப்புணா்வு நடைப்பயிற்சியை தொடங்கிவைத்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதன் மூலம், குற்றங்கள் நிகழ்வதைக் குறைத்து, போலீஸாருக்கு உதவுவதுடன், தங்களைச் சாா்ந்தவா்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

வடக்கு பெரியாா் நகா் பூங்காவில் தொடங்கிய நடைப்பயிற்சி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பூங்காவில் முடிவடைந்தது. நிகழ்ச்சியில் விருத்தாசலம் காவல் ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா் அய்யனாா் மற்றும் விருத்தாசலம், மங்களூா், ஆலடி, பெண்ணாடம், கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலைய போலீஸாா், போக்குவரத்து, மகளிா் காவல் நிலைய போலீஸாா் கலந்து கொண்டனா். நடைப்பயிற்சியில் பங்கேற்றவா்களுக்கு ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி தமிழரசன் யோகா பயிற்சி அளித்தாா்.