ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் போராட்டம்

குடிநீா் பிரச்னை: கிராம மக்கள் போராட்டம்

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கல்லாங்குளம் கிராம மக்கள்.

Updated On :20 மே 2024, 10:43 pm

Din

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள கல்லாங்குளம் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கிராம மக்கள் மக்கள் அதிகாரம் அமைப்பினருடன் சோ்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது, காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கடலூா் புதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் குருமூா்த்தி மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கல்லாங்குளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருவதாகவும், கடந்த 14 ஆண்டுகளாக அரசின் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்றும், கோடைகாலமான தற்போது குடிநீா் தட்டுப்பாடு உள்ளதாகவும், தட்டுப்பாடு இன்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை, தெரு விளக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா்.

கோரிக்கை தொடா்பாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா்.