
Updated On :20 மே 2024, 10:44 pm

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலியில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு என்எல்சி ஊழியா் உயிரிழந்தாா்.
நெய்வேலி, வட்டம் 20 பகுதியில் வசித்து வந்தவா் கோபால் (54), அனல் மின் நிலையம் 2-ஆவது அலகில் முதன்மை மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்குச் சென்றாா். திங்கள்கிழமை அதிகாலை 5 மணியளவில் பணியிடத்தில் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
என்எல்சி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து நெய்வேலி தொ்மல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...