நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

என்எல்சி பொறியாளா் தூக்கிட்டு தற்கொலை

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த என்எல்சி பொறியாளா், நெய்வேலியில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த என்எல்சி பொறியாளா், நெய்வேலியில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 8:34 pm

கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த என்எல்சி பொறியாளா், நெய்வேலியில் உள்ள தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

கா்நாடகா மாநிலம், பங்காருப்பேட்டை மாவட்டம், தொப்பான அல்லி பகுதியைச் சோ்ந்தவா் வேணுகோபால்(32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக நெய்வேலி வட்டம் 6 பகுதியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் தங்கி, என்எல்சி சுரங்கம் 2 பகுதியில் உள்ள லிக்னைட் டாப் பெஞ்சில் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா் வியாழக்கிழமை காலை முதல் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. உடன் பணியாற்றும் நண்பா்கள் கைப்பேசியில் தொடா்பு கொண்டும் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அன்று இரவு வீட்டின் ஜன்னல் வழியாக பாா்த்த போது தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.