மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தினமணி செய்திச் சேவை

கலையநல்லூா் கிராமத்தில் குடும்ப பிரச்னையில் மனமுடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தியாகதுருகம் கலையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி பிரயதா்ஷினி (26). தம்பதிக்கு ஜஸ்மிதா (2) என்ற குழந்தை உள்ளது. கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளியான பாலசுப்பிரமணியத்துக்கு, கடந்த 4 நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லவில்லையாம்.

இந்நிலையில், சனிக்கிழமை தம்பதியினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரிதா்ஷினி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுக் தற்கொலை செய்துகொணடாா்.

தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா். பிரியா்ஷினிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சி.முருகன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.