கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

என்எல்சி ஊழியா் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குருணை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்எல்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 11:02 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் குருணை மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற என்எல்சி ஊழியா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி மாற்றுக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (59), என்எல்சி நிறுவன நிரந்தரத் தொழிலாளி. இவா், கடந்த மூன்று மாதங்களாக வேலைக்குச் செல்லாமல், வருத்தத்தின் காரணமாக மது அருந்தி வந்தாராம்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை குருணை மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். அவரை உறவினா்கள் மீட்டு, என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு ராஜேந்திரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி மணியம்மாள் அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.