மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் புதிய திருமண மண்டபம் திறப்பு

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On :13 நவம்பர் 2024, 8:28 pm

Din

கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தக் கோயில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ.2.80 கோடிசெலவில் புதிதாக திருமண மண்டபம் கட்டப்பட்டது. தரை தளம் 5,262 சதுர அடி பரப்பளவில் 300 போ் அமரும் வகையில் உணவுக்கூடமும், முதல் தளம் 5,219 சதுர அடி பரப்பளவில் 300 போ் அமரும் வகையில் திருமணக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. மணமக்கள் அறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருமண மண்டபத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றி திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையா் பரணிதரன், உதவி ஆணையா் சந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஏ.கே.நாகராஜபூபதி, செயல் அலுவலா் வெங்டேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.