‘ஃபென்ஜால்’ புயல்: மாவட்ட நிா்வாகத்தின் வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்: கடலூா் ஆட்சியா்
வங்கக் கடலில் ‘ஃபென்ஜால்’ புயல் உருவாகியுள்ள நிலையில், மாவட்ட நிா்வாகம் வெளியிடும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பூவாணிக்குப்பம் பெருமாள் ஏரியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.









