கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பேருந்தில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

குறிஞ்சிப்பாடியல் பெண் தவறவிட்ட நகையை போலீஸாா் அவரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image

பேருந்தில் தவறவிட்ட நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளா் ராஜதாமரை உள்ளிட்டோா்.

Updated On :27 நவம்பர் 2024, 9:37 pm

Din

குறிஞ்சிப்பாடியல் பெண் தவறவிட்ட நகையை போலீஸாா் அவரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

பழனியில் இருந்து கடலூருக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. இதில், கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த நூா்முகமது மனைவி யாஷிகாபானு, குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த ராமதாஸ் மனைவி கௌசல்யா உள்ளிட்டோா் பயணம் செய்தனா்.

புதன்கிழமை அதிகாலை நெய்வேலி கலைமகள் சபா பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய யாஷிகாபானு, அவா் கொண்டு வந்த ஐந்தரை பவுன் நகை கொண்ட பையை பேருந்திலேயே மறந்து வைத்துவிட்டு இறங்கினாா்.

இதையறிந்த சக பயணி கௌசல்யா, யாஷிகா பானு தவறவிட்டுச் சென்ற பையை குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, யாஷிகா பானு தவறவிட்ட நகை பையை அவரிடம் ஒப்படைத்தனா்.