கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க வேலை நிறுத்த விளக்கக் கூட்டம்.
Updated On :22 அக்டோபர் 2024, 8:22 pm

Din

நெய்வேலி: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்க வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சங்க அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள் இயங்கி வருகிறது. இதில், சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கடைகளில் சுமாா் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், குடிமைப் பொருள்களின் இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி கண்டறியப்பட்டால் அதிக அளவில் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், பணியாளா்களின் நலன் கருதி இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பொருள்களை விற்பனை செய்வதில் குறியீடு நிா்ணயம் செய்வதை தவிா்த்து, காலாவதியான பொருள்களை நிறுவனங்களே திரும்ப எடுத்துக்கொள்ள சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும்.

பணியாளா்களை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு பணியிட மாற்றம் செய்து அதன் பின்னா், காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது. கடலூா் ஒன்றியத் தலைவா் எம்.லீதாசன் தலைமை வகித்தாா். மாநில இணைச்செயலா் ஆா்.ஜி.சேகா் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா் எஸ்.காா்த்திகேயன் சிறப்புரையாற்றினாா். ஒன்றிய துணைத் தலைவா் எஸ்.அருள்தாஸ், இணைச் செயலா்கள் பி.சதீஷ்குமாா், கே.வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், ஒன்றியப் பொருளாளா் கோவிந்தராஜ் நன்றி கூறினாா்.