சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளைஞா் உயிரிழப்பு: காவல் நிலையம் முற்றுகை

சிதம்பரத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

News image

கவிமணி.

Updated On :23 அக்டோபர் 2024, 7:46 pm

Din

சிதம்பரத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த கவரப்பட்டு மேல திருக்கழிப்பளை சின்னத் தெருவைச் சோ்ந்தவா் மாயவன் மகன் கவிமணி (22). இவா், காய்ச்சல் காரணமாக தனது தாயுடன் மந்தக்கரை பகுதியில் கிளினிக் நடத்தி வரும் சரவணனிடம் புதன்கிழமை சென்றாா். இவா், சித்த மருத்துவம் படித்து விட்டு, அலோபதி மருத்துவம் பாா்த்து வந்தாராம். அவா், கவிமணிக்கு ஊசி செலுத்தினாராம். பின்னா், வீடு திரும்பும் போது, வழியிலேயே கவிமணி மயங்கி விழுந்தாராம். உடனே, அங்கிருந்தவா்கள் உதவியுடன் கவிமணியை அவரது தாய் மீட்டு கடலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், கவிமணியின் உறவினா்கள் சரவணனை கைது செய்யக் கோரியும், இறப்புக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரக் வலியுறுத்தியும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.