சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

என்எல்சி தொழிலாளா்கள் கருப்பு கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

இருபது சதவீதம் தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

நெய்வேலி பெரியாா் சிலை அருகே கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள்.

Updated On :30 அக்டோபர் 2024, 7:57 pm

Din

இருபது சதவீதம் தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் சுமாா் 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத்தின் தலைவா் அந்தோணி செல்வராஜூக்கு பணி வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இதன் தொடா்ச்சி நெய்வேலி வட்டம் 8 பகுதியில் உள்ள பெரியாா் சிலை அருகே என்எல்சி இந்தியா நிறுவனத்துக்கு வீடு, நிலம் வழங்கியோா் சங்கத்தின் செயலா் பூவராகவன் தலைமையில், அந்தோணி செல்வராஜ் முன்னிலையில் சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் குடும்பத்தினருடன் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பேச்சுவாா்த்தை: இதுதொடா்பாக கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அபிநயா தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தை கூட்டத்தில், என்எல்சி தரப்பில் முதன்மை மேலாளா் உமா மகேஸ்வரன், தொழிற்சங்கம் சாா்பில் சிறப்புச் செயலா் எம்.சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேச்சு வாா்த்தைக்கு பின்னா் எம்.சேகா் கூறியதாவது: மண்டலத் தொழிலாளா் ஆணையா் மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் அறிவுரையின்படி, அந்தோணி செல்வராஜை மீண்டும் பணி அமா்த்துதற்கான சாதகமான முடிவை சனிக்கிழமைக்குள் (நவ.2) எடுக்க வேண்டும். நவ.12-ஆம் தேதி தமிழக முதல்வரை, என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் குடும்பத்துடன் சந்திப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். போனஸ் தொடா்பாக சட்ட ரீதியான மற்றும் தொழிலாளா்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.