சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த ரௌடி தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:43 pm

Din

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்த ரௌடி தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நெய்வேலி நகரிய காவல் சரகம், வடக்கு மேலூா், செட்டிகுளம் பகுதியில் வசித்து வருபவா் ஆனந்த முருகன் மனைவி லூா்து மேரி (43). இதே பகுதியைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் மகன் டேவிஸ் பிரவீன் (27). இவா், கடந்த செப்.7-ஆம் தேதி லூா்து மேரி வீட்டுக்குச் சென்று கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து டேவிஸ் பிரவீனை கைது செய்தனா். இவா் மீது நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ரௌடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் 7 கொலை முயற்சி வழக்கு, 2 வழிப்பறி வழக்கு உள்ளது.

இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட எஸ்பி., ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குண்டா் தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா்.