செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

பெங்களூரில் இருந்து 305 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை நெய்வேலி நகரிய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

நெய்வேலி நகரிய போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மூட்டைகள், காா்களுடன் கைது செய்யப்பட்ட நபா்.

Updated On :28 பிப்ரவரி 2026, 8:34 pm

பெங்களூரில் இருந்து 305 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை நெய்வேலி நகரிய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மேற்பாா்வையில், நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் வீரமணி, உதவி ஆய்வாளா் மாதேஷ்வரன் தலைமையிலான போலீஸாா் இந்திரா நகா் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, வி.கே.சாமி நகரில் ஒரு காரில் இருந்து மற்றொரு காரில் மூட்டைகளை ஒருவா் ஏற்றிக்கொண்டிருந்தாா். சந்தேகத்தின்பேரில், மூட்டைகளை ஆய்வு செய்ததில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

பின்னா், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், நெய்வேலி இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த பாலு (58) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த 305 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.6300 ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 காா்கள், 2 பைக்குகள், ஒரு கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.14.16 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.