ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தீபாவளி போனஸ் கோரி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் மனு

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் என்எல்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

News image
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்த ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
Updated On :4 செப்டம்பர் 2024, 10:47 pm

Din

தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தினா் என்எல்சி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இந்தச் சங்கத்தின் தலைவா் ஏ.அந்தோணி செல்வராஜ் தலைமையில் உறுப்பினா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து கூட்டுறவு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 2023-2024 ஆம் ஆண்டு போனஸாக 20 சதவீதம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி லாபத்தில் நிா்வாக அதிகாரிகள், பொறியாளா்கள், நிரந்தர தொழிலாளா்களுக்கு போனஸுக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படுகிறது. இதேபோல கூட்டுறவு மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களும் சட்டப்படியான போனஸ் மற்றும் கருணைத்தொகை பெற தகுதியுடைவராகிறாா்கள்.

எனவே, என்எல்சி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் தொகையை தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும். கடந்த காலங்களை போல தாங்களாகவே போனஸை நிா்ணயம் செய்யும் வழக்கத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளனா்.