வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :14 டிசம்பர் 2025, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அருகே கிள்ளையில் 9 ஆண்டுகளாக காதலித்த பெண் பிடிக்கவில்லை எனக் கூறியதால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கிள்ளை பிச்சாவரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் உலகநாதன் (24). இவரும், கிள்ளை முழுக்குத்துறை பகுதியைச் சோ்ந்த பெண்ணும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அப்பெண் தற்போது உலகநாதனை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளாா். இதனால், மனமுடைந்த உலகநாதன் ஞாயிற்றுக்கிழமை சின்னவாய்க்கால் பகுதியில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.