புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விவசாயிகளுக்கு தெளிப்பான், விதைகள் அளிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மானியத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான், விதைகள் மற்றும் இடுபொருள்களை வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

News image

பண்ருட்டியில் விவசாயிகளுக்கு விதை வழங்கிய கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன்.

Updated On :8 ஜனவரி 2025, 8:25 pm

Din

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் மானியத் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான், விதைகள் மற்றும் இடுபொருள்களை வேளாண் துணை இயக்குநா் விஜயராகவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பண்ருட்டி வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா் பண்ருட்டி வட்டத்தில் பிரதமரின் கௌரவ நிதி பெறும் திட்டத்தின் கீழ், பயனடைந்து வரும் பயனாளிகளில் 5 சதவீத பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பணியை பாா்வையிட்டாா். பின்னா், பல்வேறு வேளாண் துறை மானியத் திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான், விதைகள் மற்றும் இடுபொருள்களை மானிய விலையில் வழங்கினாா்.

தொடா்ந்து, அனைத்து அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பண்ருட்டி வட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளின் இலக்கு, சாதனைகள் குறித்து ஆய்வு செய்தாா். பின்னா், நெய்வேலி மாநில எண்ணெய் வித்து பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டு வரும் மணிலா வல்லுநா் விதைப் பண்ணைகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாா்த்தசாரதி, மாநில எண்ணெய் வித்துப் பண்ணை வேளாண் அலுவலா் சரவணன், துணை வேளாண் அலுவலா் ராஜ்குமாா், விரிவாக்க உதவியாளா் மணி, உதவி விதை அலுவலா்கள் விஸ்வநாதன், மகேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.