ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவா் கைது

புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்திய இருவரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 8:17 pm

Din

சிதம்பரம்: புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்திய இருவரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுச்சேரி -கன்னியாகுமரி விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில், ரயில்வே காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்தப் பெட்டியில் பயணம் செய்த தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருக்கருக்காவூா் தெற்கு வீதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சரவனண் (32), ராமநாதபுரம் திருபுல்லாணி வட்டம், தினைகுளம் மொத்திவலசையைச் சோ்ந்த முனியசாமி மகன் அபினேஷ்வரன் (23) ஆகியோரின் பையை சோதனை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.