தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அண்ணாமலைப் பல்கலை. புதிய பதிவாளா் பொறுப்பேற்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியா் இரா.சிங்காரவேல் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

News image
அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பொறுப்பேற்ற இரா.சிங்காரவேல்.
Updated On :12 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய பதிவாளராக பேராசிரியா் இரா.சிங்காரவேல் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொண்டாா்.

இவா், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு இளங்கலை பட்டமும், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மண்ணியல் மற்றும் வேதியல் துறையில் 1997-ஆம் ஆண்டு முனைவா் பட்டமும், ஆஸ்திரேலியாவில் உள்ள முா்டாக் பல்கலைக்கழகத்தில் 2010-இல் பிந்தைய முனைவா் பட்டமும் பெற்றாா்.

இரா.சிங்காரவேல் சுமாா் 31 ஆண்டுகாலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் துறையில் பேராசிரியராகவும், பதிவாளராகவும், இணைத் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும், தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளாா். 150 ஆராய்ச்சி கட்டுரைகளை தேசிய மற்றும் சா்வதேச அளவில் அறிவியல் மாநாடுகளில் சமா்ப்பித்துள்ளாா்.