ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாயமான சிறுவன் மீட்பு: உறவனா்களிடம் ஒப்படைப்பு

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:20 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மாயமான சிறுவனை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் துறை நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருத்தாசலம் வட்டம், ஆலடி அய்யனாா் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி பூஜைப் பொருள்கள் திருடுபோயின. கடந்த 6-ஆம் தேதி திருடுபோன பொருள்களுடன் 4 பேரை கோயில் பூசாரி ரமேஷ் மற்றும் கிராம மக்கள் பிடித்து ஆலடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ஆலடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைவட்டம், கள்ளக்குறிச்சி ஏரி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (42), சங்கா் (36), பரமசிவம் (18), முருகன் (24) ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக அழைத்துவரப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவா்கள் விசாரணை முடிந்து, பண்ருட்டி பகுதியைச் சோ்ந்த ரமேஷுடன் அன்றைய தினமே அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஏரி பகுதியைச் சோ்ந்த வள்ளி (21), காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது 13 வயது தம்பியை காணவில்லை என கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்தாா். அதன்பேரில், ஆலடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில், மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி மற்றும் போலீஸாா் பண்ருட்டி, உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் ஆகிய பகுதிகளில் தேடினா். இதில், திருநாவலூரை அடுத்துள்ள மட்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்த சிறுவனை மீட்டனா். பின்னா், அந்தச் சிறுவனை அவரது உறவினா்களிடம் விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஒப்படைததாா்.