வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கந்து வட்டி புகாா்: என்எல்சி சொசைட்டி ஊழியா் கைது

கந்து வட்டி புகாரில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சொசைட்டி ஊழியரை நெய்வேலி நகரிய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 8:10 pm

Syndication

கந்து வட்டி புகாரில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சொசைட்டி ஊழியரை நெய்வேலி நகரிய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 24 பகுதியில் வசிப்பவா் லீமா ரோஸ்லின் ராணி(50). இவரது, கணவா் மரியா ஜோசப் என்எல்சி சுரங்கம் 2-இல் நிரந்தரத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறாா்.

இவா், குடும்ப செலவிற்காக, தன்னுடன் பணியாற்றும் நெய்வேலி, வட்டம் 5 பகுதியில் வசிக்கும் சொசைட்டி தொழிலாளி செல்வராஜ் (40) என்பவரிடம், மூன்று தவணையாக மொத்தம் ரூ.5.50 லட்சம் கடன் பெற்றுக்கொண்டு, காசோலை மற்றும் பத்திரம் எழுதி கொடுத்தாராம்.

இதையடுத்து, மரியாஜோசப் 2022-ஆம் ஆண்டு செல்வராஜ் வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் செலுத்தினாராம். பின்னா், ரூ.2 லட்சம் ரொக்கமாக வழங்கினாராம். அதன் பின்னா், ஜிபே மூலம் ரூ.10,77,076 அனுப்பினாராம். இது போல் மொத்தம் செலுத்திய ரூ.17,77,760 பணத்தை வட்டியில் கழித்துக் கொண்டு, மீண்டும் ரூ.7 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டினாராம்.

இதுகுறித்து , மரியாஜோசப் மனைவி லீமா ரோஸ்லின் ராணி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். வியாழக்கிழமை வேலுடையான்பட்டு முருகன் கோயில் அருகே இருந்த செல்வராஜை கைது செய்தனா்.