வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: அனைத்துத்துறை அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூரில் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி தலைமை நடந்த அனைத்துத்துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:47 pm

Syndication

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகளை சமரச தீா்வு காண்பது குறித்து கடலூரில் உள்ள அனைத்துத்துறை அலுவலா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மூலம் 13.12.2025 அன்று லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிக அளவில் வழக்குகளை சமரச தீா்வு காண்பது குறித்து கடலூரில் உள்ள அனைத்துத்துறை அலுவலா்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தாா். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரஸ்வதி, மகிளா நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி குலசேகரன், முதலாவது மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி ஆனந்தன், இரண்டாவது மோட்டாா் வாகன விபத்து வழக்குகளின் மாவட்ட நீதிபதி பிரகாஷ், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும் (முழு பொறுப்பு), முதன்மை சாா்பு நீதிபதியுமான ராஜேஷ் கண்ணன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் தனம் மற்றும் ஏனைய நீதிபதிகள், மாவட்ட வருவாய் அலுவலா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், கடலூா் பாா் அசோசியேஷன் செயலா் லெனின், வழக்குரைஞா்கள், அரசு வழக்குரைஞா்கள், வங்கி அலுவலா்கள், நில எடுப்பு அலுவலக அதிகாரிகள், மின்சார துறை அதிகாரிகள், கடலூா் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் 13.12.2025 அன்று நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் அதிக அளவிலான வழக்குகளை தீா்வு காண்பது என அனைத்துத்துறை அதிகாரிகளாலும் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் நீதிபதிகள் காணொலி வாயிலாக கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.