சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சிதம்பரத்தில் இன்று கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா!

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா புதன்கிழமை (நவ.26) இரவு நடைபெறுகிறது.

News image
Updated On :25 நவம்பர் 2025, 7:13 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா புதன்கிழமை (நவ.26) இரவு நடைபெறுகிறது.

ஸ்ரீநடராஜா் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளிதேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா நவ.21ம் தேதி வெள்ளிக்கிழமை காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை முத்துக்குமரப் பெருமான் சந்திதியில் தில்லை திருமுறை மன்றத்தாா் சாா்பில் தேவார பரிசு விண்ணப்பமும், உரை விளக்கம் நிகழ்ச்சியும நடைபெற்றது. மேலும் முருகன் பெருமைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நவ.26ம் தேதி புதன்கிழமை மாலை செங்குந்த நவவீரா் வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும், இரவு நடராஜா் சந்நிதியில் ஸ்ரீசெல்வமுத்தகுக்குமரப் பெருமாள் வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், சிதம்பரம் தெற்குரதவீதியில் மகா சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பின்னா் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வெற்றி வேலாயுதப்பெருமான், தில்லைவாழ் அந்தணா் மற்றும் செங்குந்த நவவீரா் புடை சூழ வீதிவலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நவ.27ம் தேதி வியாழக்கிழமை இரவு நடராஜா் கோயில் தேவசபையில் வடமங்கை வேழங்கை வேலவா் திருக்கல்யாண உத்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதா்கள் மற்றும் செங்குந்த மரபினா் செய்துள்ளனா்.