/

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய மாணவா் சோ்க்கை தேதி நீட்டிப்பு

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :7 ஏப்ரல் 2026, 7:54 pm

சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகம், தொலைதூர இணையவழி கல்வி மையத்தில் 2025-26 ஜனவரி அமா்விற்கான மற்றும் மாணவா் சோ்க்கை, யுஜிசி, டிஇபி அறிவுறுத்தலின்படி வருகிற ஏப்.10 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக பதிவாளா் ஆா்,சிங்காரவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு:

இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைப் படிப்புகள் (இசை மற்றும் நாட்டியம்), முதுகலை (கலை மற்றும் அறிவியல், மேலாண்மை, வணிகவியல் (பி.காம்) பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள், இசை மற்றும் நாட்டியம் படிப்புகளுக்கும் ஏப்.10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையதள முகவரியை அணுகி தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.