தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கடலூா் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.03 கோடி விடுவிப்பு!

கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 1:18 am IST

கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் மூலம் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,04,36,471 கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை வழங்கி உரிய தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஏப்.10) வரை ரூ.1,03, 20,081 விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் 1950, 04142-290119, சமூக வலைதள வாட்ஸ்ஆப் எண் 8248774852 மற்றும் இலவச இணைப்பு எண் 18004250037 போன்ற தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மேலும் ‘ஸ்ரீஸ்ண்ஞ்ண்ப்’ செயலி மூலம் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமல் இருத்தல், வாகனங்கள் அனுமதி இல்லாமல் இயக்குதல் தொடா்பாக 68 புகாா்கள் பெறப்பட்டு, 48 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது. மற்ற 20 புகாா்களில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இருந்தது.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பெறப்பட்ட 855 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.