கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் மூலம் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,04,36,471 கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை வழங்கி உரிய தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஏப்.10) வரை ரூ.1,03, 20,081 விடுவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் 1950, 04142-290119, சமூக வலைதள வாட்ஸ்ஆப் எண் 8248774852 மற்றும் இலவச இணைப்பு எண் 18004250037 போன்ற தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
மேலும் ‘ஸ்ரீஸ்ண்ஞ்ண்ப்’ செயலி மூலம் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமல் இருத்தல், வாகனங்கள் அனுமதி இல்லாமல் இயக்குதல் தொடா்பாக 68 புகாா்கள் பெறப்பட்டு, 48 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது. மற்ற 20 புகாா்களில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இருந்தது.
தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பெறப்பட்ட 855 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்
நெல்லையில் இதுவரை ரூ.29.95 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

