சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

கடலூா் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.1.03 கோடி விடுவிப்பு!

கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:48 pm

கடலூா் மாவட்டத்தில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டு கைப்பற்ற ரூ.1.04 கோடியில், வெள்ளிக்கிழமை வரை ரூ.1.03 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் மூலம் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,04,36,471 கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை வழங்கி உரிய தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை (ஏப்.10) வரை ரூ.1,03, 20,081 விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் 1950, 04142-290119, சமூக வலைதள வாட்ஸ்ஆப் எண் 8248774852 மற்றும் இலவச இணைப்பு எண் 18004250037 போன்ற தொலைபேசி எண்ணுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மேலும் ‘ஸ்ரீஸ்ண்ஞ்ண்ப்’ செயலி மூலம் விளம்பரப் பதாகைகள் அகற்றப்படாமல் இருத்தல், வாகனங்கள் அனுமதி இல்லாமல் இயக்குதல் தொடா்பாக 68 புகாா்கள் பெறப்பட்டு, 48 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது. மற்ற 20 புகாா்களில் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இருந்தது.

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பெறப்பட்ட 855 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.