வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தவாக ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நெய்வேலியில் நடைபெற்ற தாவக தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவா் தி.வேல்முருகன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:56 pm

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தலைமை வகித்தாா். அப்போது, நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் தொகுதி பொறுப்பாளா்கள், கிளைச் செயலா்கள், தலைவா்கள் உள்ளிட்ட நிா்வாகிகள், நகர நிா்வாகிகள், தொழிற்சங்க நிா்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.

கூட்டத்தில், மாநில நிா்வாகிகள் திருபுவனச்சக்கரவா்த்தி, ராயநல்லூா் கண்ணன், தொகுதிச் செயலா் சிவக்குமாா், என்எல்சி இன்கோசா்வ் தொழிலாளா் வாழ்வுரிமைச் சங்கத்தின் செயலா் திருநாவுக்கரசு, தலைவா் முருகவேல் மற்றும் அனைத்துப் பகுதியின் கிளைத் தலைவா்கள், செயலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.