பாரம்பரிய வரலாற்று நாளையொட்டி, கடலூா் மாவட்டம், நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சுற்றுலா சென்றனா்.
கோயிலின் வரலாற்று சிறப்பு அம்சங்களை ஜெயப்பிரியா வித்யாலயா கல்விக் குழுமத்தின் தலைமை முதல்வா் அந்துவன் மாணவா்களுக்கு விளக்கினாா்.
இக்கோயிலின் கட்டிடக்கலை விஜய நகர மன்னா் கிருஷ்ணப்பதேவராயா் காலத்தில் தொடங்கி, செஞ்சி நாயக்கா் காலத்தில் நிறைவு பெற்றிருப்பதையும், வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோயில் தென்னிந்திய கோயில் கட்டிடக் கலையின் அழகிய எடுத்துக்காட்டாக விளங்குவதையும். இந்த கோயில் நோ்மறையாக நாயக்கா் வம்ச ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதையும், கோயில்கள் நம் பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறது என்பதையும் மாணவா்கள் அறிந்து கொண்டனா்.
மேலும், நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் தேவையான விழிப்புணா்வை மாணவா்கள் இந்த ஆன்மீக சுற்றுலா வழியாக பெற்றனா். இப்படியான சுற்றுலாக்கள் மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாக வடக்குத்து ஜெயப்பிரியா பள்ளியின் செயலா் சிந்து, முதல்வா் சிதம்பரி ஆகியோா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

இலுப்பூரில் 5 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி

பழனி கோயிலில் இபிஎஸ் மனைவி, மகன், முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

