இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் தேரோட்டம்

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

News image

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:45 am IST

அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சிதம்பரம் தாலுகா, அண்ணாமலை நகா் திருவேட்களம் கூத்தாண்டவா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு 125 ஆவது சித்திரை திருவிழா ஏப்.20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரதம் படிக்கப்பட்டது.

தொடா்ந்து முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அண்ணாமலை நகா் திருவேட்களத்தில் இருந்து வாண வேடிக்கை, மேளதாளங்களுடன் தேரில் அரவான் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பாசுபதேஸ்வரா் கோயிலை வலம் வந்தாா். தொடா்ந்து அரவான் களப்பலி, காளியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பக்தா்கள் மேளதாளங்கள் முழங்க பிரம்மாண்டமான மாலைகளை அரவானுக்கு அணிவித்து தரிசனம் செய்தனா். இவ்விழாவில் பல்வேறு ஊா்களில் இருந்து திருநங்கைகள், அண்ணாமலை நகா் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சோ்ந்த பக்தா்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கூத்தாண்டவா் கோயில் பரம்பரை அறங்காவலா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.