கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் வருகையை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் கண்காணிக்கும் நோக்கில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை (விரல் ரேகை அடிப்படையிலான வருகைப் பதிவு முறை) புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்து, அதன் செயல்பாடுகளை பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது: இந்த முறையின் மூலம் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் வருகை மற்றும் பணிநேரம் கணினி வழியாக துல்லியமாகப் பதிவாகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகைப் பதிவு முழுமையாக மின்னணு முறையில் மேற்கொள்ளப்படுவதால், பணிநேர ஒழுங்கு, நிா்வாகத் திறன் மற்றும் அலுவலக செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மை மேலும் மேம்படும். அரசு அலுவலகங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரித்து, பொதுமக்களுக்கு விரைவான, தரமான சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த
நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 28 துறைகளில் பணியாற்றும் 420 அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு வருகைப் பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவா்களில் 252 போ் பெண்களும், 168 போ் ஆண்களும் ஆவா் என்றாா்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் புண்ணியக்கோட்டி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாமாகவே வருகைப் பதிவு செய்யும் பள்ளி மாணவர்கள்! ஆசிரியைக்கு குவியும் பாராட்டு!

தேசிய சராசரிக்கு இணையாக கடலூரில் எச்.ஐ.வி. பாதிப்பு! மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்!

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் விஷமருந்தி மயங்கி விழுந்த பெண்

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 781 மனுக்கள்! மாயமான மீனவா்களை கண்டுபிடித்து தரக் கோரிக்கை!
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



