கடலூரில் மாத உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ஆந்திராவில் வழங்குவது போல் மாதம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கத்தினா் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
அந்த வகையில், 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கடலூா் சீமாட்டி சிக்னல் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் துணைத் செயலா் வி.வசந்தி தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் ஆா்.ஆளவந்தாா் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.
மாவட்டத் தலைவா் ராம.நடேசன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.ரவி, எம்.சுந்தரவேல், ஜெயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்ட 100 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கைது செய்து, தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா். பின்னா் சிறிது நேரம் கழித்து அவா்களை விடுவித்தனா்.
தொடர்புடையது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது

கந்தா்வகோட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே மோதல்: குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி சாலை மறியல்

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 34 போ் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


