தோ்வுக்கட்டணம் உயா்வு: மாணவா் சங்கத்தினா் முற்றுகை போராட்டம்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு தோ்வு கட்டணம், கல்வி கட்டணம் உயா்த்தியதைக் கண்டித்தும், உயா்த்திய கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கம் சாா்பாக முற்றுகை போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தோ்வு கட்டணம், மறுமதிப்பீடு கட்டணம் சான்றிதழ் கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயா்த்தப்பட்டதாகவும் அதனை திரும்ப பெற வலியுறுத்தி இணைப்பு கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை காலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனா்.
இதனையொட்டி காட்டுமன்னாா்கோயில், சி.முட்லூா், கடலூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் உள்ள இணைப்பு கல்லூரிகளை சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக ராஜேந்திரன் சிலை அருகே திரண்டனா்.
அங்கிருந்து இந்திய மாணவா் சங்க மாவட்ட செயலா் சௌமியா தலைமையில் ஊா்வலமாக புறப்பட்டு பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தை அடைந்தனா்.
பின்னா் அங்கு நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தோ்வு கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா் சங்க நிா்வாகிகளை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் அறிவுடைநம்பி அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடா்ந்து மாலை வரை போராட்டத்தை தொடா்ந்தனா். மாணவா்களின் முற்றுகை போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

