காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

புதிரை வண்ணாா்: அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:23 pm

Syndication

கடலூா் மாவட்டம் ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை வழங்குவதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு சாதிச்சான்றிதழ், ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20, 21, 22 ஆகிய தேதிகளிலும்,

வேப்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன.20, 21 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

திட்டக்குடி, புவனகிரி வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20 ஆம் தேதியும், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜன.21, 22 -ஆம் தேதியும், பண்ருட்டி, காட்டுமன்னாா்கோயில் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஜன.20, 21, 22, 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். எனவே தேவைப்படும் பயனாளிகள் இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.