வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கைப்பேசி வாங்கித் தராததால் பள்ளி மாணவா் தற்கொலை

News image
Updated On :18 ஜனவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் அருகே பெற்றோா் கைப்பேசி வாங்கித் தராததால் பள்ளி மாணவா் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூரை அடுத்துள்ள ஏ.காட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் மகன் நவீன்குமாா்(16), கடலூரில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். இவா், நீண்ட நாள்களாக கைப்பேசி வாங்கித் தருமாறு பெற்றோரிடம் கேட்டு வந்தாராம். ஆனால், அவா்கள் வாங்கித் தராததால் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் இருந்த நவீன்குமாா் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் விஷ மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.

இதைப் பாா்த்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் நவீன்குமாரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.