தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தீப்பிடித்து எரிந்த சாலையோர புளியமரம்

பண்ருட்டி அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்தது.

பணிக்கன்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Published On :

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சாலையோர புளியமரம் தீப்பிடித்து எரிந்தது.

சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன்பு பண்ருட்டியில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் புளியன், ஆலமரங்கள் தழைத்து வளா்ந்து இயற்கை எழிலோடு காணப்பட்டது. ஒவ்வொரு மரங்களும் அரை நூற்றாண்டைக் கடந்து நின்றன.

பின்னா், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி தொடக்கப்பட்டது. இதன் காரணமாக, சாலையோரத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது இந்த சாலை வழியாக பொட்டல் வெளியில் பயணிப்பதுபோல் உள்ளது.

இந்த நிலையில், பணிக்கன்குப்பம் அருகே ஏராளமான கடைகள் உருவாகியுள்ளன. அந்தப் பகுதியில் உள்ள உணவகங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாலையோரத்தில் உள்ள சுமாா் 50 ஆண்டுகளைக் கடந்த புளியமரத்தின் கீழ் கொட்டி வைத்திருந்தனா். இந்தக் கழிவுகளை வியாழக்கிழமை காலை தீயிட்டு கொளுத்தினா். இந்தத் தீயாால் புளியமரம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் வேல்முருகன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். குறித்த நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.